சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 12 நவம்பர், 2009

திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்

==திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்
=================================

* டிசம்பர் 24 முதல் 27 வரை/திருப்பூர் முத்து மஹாலில்
* கட்டணம் ரூ 1,700/ மட்டும்
* சிறப்பு பயிற்சியாளர்கள்:

இயக்குனர்கள் பாலு மகேந்திரா, கே ரங்க்ராஜ் ( உதய கீதம் ) அ, நந்தினி ( திரு திரு துறு துறு )
எழுத்தாளர்கள் பா ராகவன், எஸ் ராமகிருஸ்ணன், சுப்ரபாரதிமணியன்
ஒளிப்ப‌திவாள‌ர் தாமு, ப‌ட‌த்தொகுப்பாள‌ர் உத‌ய‌ச‌ங்க‌ர், இசைய‌மைப்பாள‌ர் சுரேஸ் தேவ்
ப‌திவுக்கு: VRP Academy of Arts, 1503, ஞான‌கிரி சாலை, காம‌ராஜ‌புர‌ம் கால‌னி, சிவ‌காசி 626 189 கைபேசி: 99524 24292, manohar_vrp@yahoo.com
===========================================================

திருப்பூர் அரிமா விருதுகள்
===========================

* அரிமா குறும்பட விருது ரூ 10,000 பரிசு( கடந்த 2 ஆண்டுகளில் வந்த குறும்படங்களை அனுப்பலாம்)
* அரிமா சக்தி விருது ( கடந்த 2 ஆண்டுகளில் வந்த பெண் எழுத்தாளர்களுக்கானப்
நூல்களில் 2 பிரதிகள் அனுப்பவும் )
* சென்றாண்டு பரிசு பெற்றோர்:

அரிமா குறும்பட விருது :
1. கார்த்திக் சோமசுந்தரம் , சென்னை( நானும் என் விக்கியும் )
2. பாலு மணிவண்ணன், சென்னை ( அம்மாவும், மம்மியும் )
3. ஜோதிகுமார் , திருப்பூர் ( வறுமையின் கனவு )
4. வி.ஜெகதீஸ்வரன், தேனி ( தொடர்பு எல்லைக்கு வெளியே )
5. தாண்டவக்கோன், திருப்பூர் ( இப்படிக்கு பேராண்டி )
6.எஸ். ராஜகுமாரன், சென்னை ( 21 இ, சுடலைமாடன் தெ
7.எஸ்.ஜே. சிவசங்கர்,கன்னியாகுமரி( இரங்கலும், இரங்கல் நிமித்தமும்)
8. விஜயகுமார், சேலம் ( குப்பை)
9.மணிமேகலை நாகலிங்கம்,சென்னை( த்தூ)
10. நா. செல்வன், நெய்வேலி ( இருட்டறை வெளிச்சங்கள் )

சிறப்புப் பரிசுகள்:
1. து.சோ.பிரபாகர், திருப்பூர் ( தக்காளி )
2. தி.சின்ராசு, மேட்டுப்பாளையம் ( மரம், மரம் அறிய ஆவல் )
3. நம்பி, அவிநாசி ( Stop child trafficking )
* அரிமா திரைப்படவிருது: மு. ராமசாமி. தஞ்சை
* அரிமா நாடக விருது : சி.எச். ஜெயராவ், சென்னை

அரிமா சக்தி விருது
===================

1. அர‌ங்க‌ ம‌ல்லிகா, சென்னை ( நீர்கிழிக்கும் மீன், ‍க‌விதைக‌ள்)
2. ச‌.விஜ‌ய‌ல‌ட்சுமி, சென்னை ( பெருவெளிப்பெண், ‍க‌விதைக‌ள்)
3. மு.ஜீவா, கோவை ( பின்ந‌வீன‌த்துவ‌மும், பெண்ணிய‌ செய‌ல்பாடுக‌ளும்)
4.மித்ரா, சித‌ம்ப‌ர‌ம் ( ஜ‌ப்பானிய‌ த‌மிழ் ஹைக்கூக்க‌ள்‍,க‌ட்டுரைக‌ள்)
5.ச‌க்தி ஜோதி, திண்டுக்க‌ல் ( நில‌ம்புகும் சொற்கள்,‍க‌விதைக‌ள்)
6.ர‌த்திகா, திருச்சி (தேய்பிறையின் முத‌ல் நாளிலிருந்து க‌விதைக‌ள்)
7.ச‌க்தி அருளான‌ந்த‌ம், சேல‌ம் (பறவைகள் புறக்கணித்த நகரம் ‍‍,‍கவிதைகள்)
சிற‌ப்புப் ப‌ரிசுக‌ள்
==============
1.ச‌ந்திர‌வ‌த‌னா, ஜெர்ம‌னி ( ம‌ன‌ஓசை, சிறுகதைகள்)
2.ஜெயந்தி சங்க‌ர், சிங்க‌ப்பூர் ( ம‌ன‌ப்பிரிகை, நாவ‌ல்)
3.நா.ச‌ண்முக‌வ‌டிவு, கோவை(வான்விய‌ல் சாஸ்திர‌ம்)
4.மு.ச‌.பூங்குழ‌லி, ப‌ழ‌னி (எரிம‌லைப்பூக்க‌ள், கட்டுரைக‌ள்)

அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி:
========================

ம‌த்திய‌ அரிமா ச‌ங்க‌ம், 39/1 ஸ்டேட் பேங்க் கால‌னி,
காந்திந‌க‌ர், திருப்பூர் 641 603.
தொலைபேசி: 0421 645188, 09344690640,09443559215

===============================================================